என்ன டாக்டர், அந்த பேஷண்டுக்கு ஆஸ்பத்திரில குடுத்த உடைமுழுக்க ஏதேதோ கம்பெனி விளம்பரமா இருக்கு? அந்தக் கம்பெனிகள் எல்லாம் சேர்ந்துதான் அவரோட அறுவை சிகிச்சைக்கு ஸ்பான்சர் பண்றாங்க. சரியாப் போச்சு.
என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க? நான் உங்க சொந்தக்காரன் சார். எப்படி? என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.
கணவன்: என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது? மனைவி: நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை? கணவன்: நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.
என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு முயற்சி செய்துபார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது. என்ன செய்யறது? ஒண்ணும் செய்யவேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நினைச்சிக்க. அழுகை தானா வரும்.